Login Form



ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி
Saturday, 12 June 2010 05:04

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

Read more...
 
மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?
Saturday, 10 April 2010 07:11

 
 போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும், தமிழகத்தில் முழு வீச்சில் பல வருடங்களாக விற்பனை செய்யப்பட்ட கொடுமையான உண்மை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டையே உலுக்கி உள்ளது. சில உயிர்கள் பலியான பிறகே இந்தக் கொடூர மோசடி வெளிவந்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் காலாவதியான மருந்துகளை அழிக்கும் கிடங்கு உள்ளது. கொடுங்கையூருக்குக் கொண்டு வரப்படும் காலாவதியான மருந்துகளை சில கொடுங்கையர்கள் வழியிலேயே மடக்கி, அவற்றை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, காலாவதியான தேதிகளை மாற்றி, புதிய தேதிகளை அச்சடித்து மறுபடியும் விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளனர்.

 

Read more...
 
குளியல் சோப்
Monday, 29 June 2009 08:31

குளியல் சோப்

    நாம் அன்றாட பயன்களில் சோப்பும் ஒன்றாக உள்ளது.  விலையுயர்ந்த, சிறந்த நறுமணம் தரும் சோப்பு, ஷhம்புகளில் நாம் குளிப்பதால் மகிழ்ச்சி ஏற்படுவதாக நாம் எண்ணுகிறோம்.  ஆனால் அதிலிருக்கும் மணம் சிறுது நேரத்தில் காணாமல் போய்விடும்.

1.    சறுமத்திற்கு தேவையான எண்ணெய்ப்பசையை அழிக்கிறது.

2.    தோலுக்கு வறட்சியைத் தருகிறது.

சோப்பில் சேர்க்கப்படும் பென்சாயின் ரசாயனம் நுரைக்குச் சேர்க்கப்படும் டிடர்ஜெண்ட் பவுடரோ உடலுக்கு உகந்ததல்ல. சோப்பில் பல மூலிகைகள் சேர்த்திருப்பதாகக் கூறினாலும் அதோடு ரசாயனங்கள் கண்டிப்பாகச் சேர்ப்பதால், மூலிகைகள் தம் முழுத்தன்மையை இழந்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை.  இதற்கெல்லாம் காரணம் நாகரீகமும், நுரையின் மோகமும் தான். 

Register to read more...
 
மருத்துவ பயங்கரவாதிகள் !!
Tuesday, 06 April 2010 13:38
 காலாவதியான மருந்துகளைப் புதிய லேபிள்களில் அடைத்தும்,  போலி மருந்துகளைத் தயாரித்தும் தமிழகமெங்கும் விற்பனை செய்த கும்பல் சமீபத்தில் பிடிபட்டுள்ளது. இருப்பினும் இது புதிய செய்தியல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ’கேப்ஸ்யூல்ஸ்’ எனப்படும் கூட்டு மாத்திரையில் வெறும் மஞ்சள் பொடியை அடைத்து விற்பனை செய்த கம்பெனியொன்று பஞ்சாப்பில் பிடிபட்டதை நாம் அறிவோம். இருப்பினும் இப்போதுதான் இது போன்று  நடப்பதைப்போல செய்திகள் பரப்பப்படுகின்றன.
Read more...
 
ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தார்ந்தம்
Monday, 29 June 2009 08:38
   மூன்றுதோஷங்களும் அதிகரித்தால் அவை, வியாதிகளின் அறிகுறிகளை, அவற்றின் தீவிரத்திற்கேற்ப வெளிப்படுத்துகின்றன.  குறைந்தால் தோஷங்கள் தங்களின் சாதாரண அறிகுறிகளை மறைத்து, குறைத்துவிடுகின்றன.  சாதாரண நல்ல நிலையில் இருக்கும் போது, உடலின் இயல்பென செயல்பாடுகள் குறையின்றி நடக்கும்.
 
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2
 
  Advertisement Tarif | Copyright © 2009 www.tamizhankural.com. All Rights Reserved.

Design by Techcmantix Technologies
 
 
     
 
   
Design by go-vista.de and augs-burg.de